பக்கங்கள்

சனி, 10 அக்டோபர், 2020

மிக்க பண்பின் குடியிருப்பு அவர்தாம் பெரியார் பார்! -4


April 25, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள்

“மிக்க பண்பின் குடியிருப்பு” அவர்தாம் பெரியார் பார்! (4)

“மிக்க பண்பின் குடியிருப்புதந்தை பெரியார் அவர்களைப்பற்றி பலரும் ஜோடனையாகவோ, கற்பனைக் கதைகளாகவோ, ஊகங்களாகவோ பலவற்றைக் கூறி, "அவர் ஒரு கஞ்சன்”, “கருமித்தனம் படைத்தவர்” என்று கூறுவது வழக்கம். இவை பெரியாரைப்பற்றி அறியாதோரின் தவறான மதிப்பீடு. 'சிக்கனத்தின் சிகரம்' அவர் என்பது உண்மை ; ஆனால், பலரும் சிக்கனத்திற்கும், கருமித்தனம் - கஞ்சத்தனத்திற்கும் உள்ள வேறுபாடுபற்றி அறியாதவர்களேயாவர்! அய்யா சொல்வார், "எதையும் தேவைக்கு ஏற்ப செலவழிப்பது - சிக்கனம் தேவைக்குமேல் செலவழிப்பது- ஆடம்பரம் தேவைக்கே செலவழிக்காது இருப்பது - கருமித்தனம் ஆகும்.

"வரிசையில் தந்தை பெரியார் அவர்கள் ஒரு சிக்கனக்காரர் - ஆடம்பரத்தை அறவே வெறுத்து, எளிமையே எப்போதும் இனிமை என் பதை வாழ்ந்து காட்டி, அச் சிக்கனத்தால் சேர்த்த பொருளைத் தன் பெண்டு, தன் பிள்ளை, தம் மக்கள் என்று தராமல், தொல்லுலக மக்களுக்குத் தொண்டறத்திற்கென விட்டுச் சென்ற ஒப்பாரும் மிக்காரும் இலாதவர் அவர்! நகைச்சுவையரசர் கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன், சீரிய பகுத்தறிவாளர்.

அவர் 1945 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு கொலை வழக்கில் திட்டமிட்டே சிக்க வைக்கப்பட்டு, ஆயுள் தண்டனை இவருக்கும், இசை மேதை எம்.கே. - தியாகராஜ பாகவதருக்கும்! அப்போது சென்னை மத்தியசிறைச்சாலையில் கலைவாணரைச் சந்தித்த தந்தை பெரியார், வழக்கு நடத்தப் பணம் இருக்கிறதா அவரிடம் என்று சந்தேகப்பட்டு, சுமார் 10 ஆயிரத்திற்கும்

மேற்பட்ட ஒரு பெருந்தொகையை கையில் எடுத்துக்கொண்டு, கொடுக்க முன்வந்தபொழுது கண்ணீர் விட்ட என்.எஸ்.கே. கனக்கப்அ பொருள் தட்டுப்பாடு இல்லை; தேவைப்படும்போது கேட்டு வாங்கிக் கொள்கிறேன் என்றார்.

மறுநாள் டி.ஏ.மதுரம் அம்மையாரிடம், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு மீரான் சாயபுத் தெருவுக்குச் சென்று, அய்யா அவர்களைச் சந் தித்து, அப்பணத்தைத் திருப்பித் தரும்படி என்.எஸ்.கே அவர்கள் அனுப்பியது வரலாறு அல்லவா? (அன்றைய பத்தாயிரம் இன்று கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள பெருந்தொகை என்பதையும் மறந்துவிடக்கூடாது).

1967- அறிஞர் அண்ணா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை பெரிய மருத்துவ மனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று, அமெரிக் காவிற்கு அழைத்துச் செல்லப்படும் முன், அன்று காலையில் அய்யா, அண்ணாவைப்பார்த்து நலம் வாவைப் பார்க்க நலம் விழைந்து வழியனுப்பும் வகையில், சென்னை மருத்துவமனைக்குச் செல்கிறார்.

உடன் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், புலவர் கோ.இமய வரம்பன் (தனிச் செயலாளர்), நான் ஆகியோர் உடன் செல்கிறோம். அப்போது அய்யா உடல் நலம் விசாரித்த பாங்கு கண்ட அண்ணா , மிகுந்த யார், புலவன் அன்னைஉணர்ச்சிவசப்பட்ட வராகக் காணப்பட்டார்.

விசாரித்துப் பேசிய தந்தை பெரியார், ஒரு பண முடிப்புக்கட்டை அறிஞர் அண்ணா அவர்களிடம் தந்து, வெளிநாட்டில் சிகிச்சை என்றால், மிகவும் செலவாகும். இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார், அண்ணாவின் கண்ணீர்த் துளிகள் ஒரு பக்கம் கசிந்த நிலை. அண்ணா உணர்ச்சியோடு சற்று மவுனமானார்; பிறகு, அண்ணா , அய்யாவுக்கு நன்றி கூறி, 'அய்யா, அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்தாகிவிட்டது.

தங்களுக்கு மிகவும் நன்றி' என்று தழுதழுத்த குரலில் கூறிடும் நிலையில், ப்போது தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், அண்ணாவைப் பார்த்து வழியனுப்பி, நலம் விசாரிக்க அங்கே வந்திருந்தார், ஒரு குடும்பம் போல, பல்துறைப் பிள்ளைகளும் - தந்தையும், த தனயர்களுமாக இருந்த அந்தக்காட்சி, எங்களுக்கு " என்றென்றைக்கும் அழியாத ஓவியமன்றோ!

" இதுபோல், பற்பலருக்கும் அ இல்லாமல் விரும்பிச் செய்திட்ட உதவிகள் அவருக்கும், அவருடைய டைரிக் குறிப்புக்கும் மட்டுமே வெளிச்சம்; பற்பல நேரங்களில் அம்மா விடம்கூட அவர் அப்போது கூறியது கிடையாது! ஒரு கை செய்த உதவி மறு கை அறியக்கூடாது என்பது மத வாசகமாக இருக்கலாம்;

ஆனால், அதை நடைமுறையில், வாழ்வியலாக ஆக்கி, இறுதிவரை வாழ்ந்தவர் ஈரோட்டு வள்ளல் நம் - அய்யா அவர்கள். "மிக்க பண்பின் குடியிருப்பு” என்ற புரட்சிக் கவிஞரின் கவிதை ஓவியம் எவ்வளவு சரி என்பது புரிகிறதல்லவா? அய்யாவின் பண்பு நலன்கள் பல வரலாற்றில் மற்ற பெரிய தலைவர்கள் என்போரிடம் தேடினா லும் கிடைக்காது - அவை அரிய புதையல்கள், கனத்த கருவூலங்கள். ஞரின் கலவன் குடியின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக