பக்கங்கள்

சனி, 22 பிப்ரவரி, 2020

"கரோனோ வைரஸ்" - அச்சம் வேண்டாம்!

உலகில் புதுப்புது நோய்கள் உருவாகி, பல நாடுகளுக்கும் பரவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது! பல நாட்டு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்!

சீனாவில் ஏற்பட்ட 'கரோனா' தொற்று வைரஸ் கண்டு உலகமே அஞ்சி நடுங்குகிறது; சுமார் 20,000 பேர் அங்கே பாதிக்கப்பட்டு, சுமார் 500 பேர்கள் பலியாகியுள்ளனர் - இதுவரையில். வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

சீன அரசு அதனை எதிர்கொள்ள பல முனை களிலும் பாதுகாப்பு - தடுப்பு ஏற்படுத்தி வருகிறது.

பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது!

முன்பு “பறவைக் காய்ச்சல்" காரணமாக சிங்கப் பூரின் சுற்றுலா குறைந்து, அதன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

விமான நிலையங்களில் அதிகமான கண் காணிப்பை அந்தந்த நாட்டு மத்திய, மாநில "சுகாதார அமைப்புகள்" சிறப்பாக செய்து, அங்கிருந்து அந்த "வைரஸ்" - தொற்று நோய்க் கிருமிகள் இங்குள்ள மக்களிடம் பரவி, அவர்கள் பலியாகக் கூடாது என்ப தற்காக பல கட்ட சோதனைகளை ஏற்படுத்துகின்றன.

ஆனால் நாம், நமக்கு நாமே ஒரு தடுப்பு முறையை - பாதிப்பு ஏற்படாத வண்ணம் உருவாக்கிக் கொண்டு தற்காப்புடன் இருப்பது மிகமிக அவசியம்.

1. இப்போது மனிதர்களுக்குப் பரவிப் படையெடுக்கும் கரோனா தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் கிடைக்கின்றன! அவைகளைப் போட்டுக் கெள்ளுங்கள்.

2. அடிக்கடி கையை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவுங்கள். எதையும் சாப்பிடும் முன்பும் - மருந்துகளை சாப்பிடும் முன்பும் கட்டாயம் கை கழுவிய பின்னரே எடுத்துக் கொள்ளுங்கள்.

3. கைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு, மற்றும் வாய்ப் பகுதிகளைத் தொடுவதைத் தவிர்த்து விடுங்கள்.

Samitgal எடை திரவம், Anti Septic சிறு சிறு பாட்டில்களில் விற்பனையாகிறது. Dettol போன் றவை வாங்கி அலுவலகத்திலோ, இருக்கை பக்கத் திலோ வைத்து கைகளில் சிறிது தடவிக் கொள்ளுங் கள்.

4. உடல் நலம் குன்றிய நோயாளிகளிடம் நெருக்கமாக இருப்பதை கூடுமான வரை தவிர்த் திடுங்கள்.

5. கைக் கொடுப்பதை (Hand Shaking) தற்காலிகமாக தள்ளி வையுங்கள். யாருக்கும் கை கொடுக்கும் பழக்கம் இப்போது வேண்டாம்!

வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

கவனம்: குழந்தைகளுக்கு "ஆஸ்பிரின்" போன்ற மாத்திரையைக் கொடுக்காதீர்கள், தவிர்த்து விடுவது அவசியம்.

“வேது பிடித்தல் என்ற நீராவி கொண்டு “ஆவி பிடிக்கலாம்; நல்ல பயன் ஏற்படும் (சில நேரங்களில் நமக்கு எளிமையாக பழைய பாட்டி வைத்தியம் கூட தேவைப்படுகின்றதே!)

6. இருக்கும் இடங்களை ஈரமாக்காதீர். கதகதப்புடன் சற்று சூடாகவே வைத்துக் கொள்வது நல்லது. கிருமிகளைத் தடுக்க அல்லது அழிக்க அதுகூடப் பயன்படும்.

வெந்நீரில் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை குளிப்பது - உடலைத் தூய்மையாக்கிக் கொண்டு, உடைகளையும் வெந்நீரில் நனைத்து வெளுக்க வைத்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக உள்ளாடைகளை.

7. உங்கள் உடம்பு என்ன சொல்கிறது என்பதை நன்கு உணர்ந்து கேளுங்கள் - டாக்டர் அறிவுரை களை விட இதுவே முக்கியம் - முதன்மையானது!

உடம்பு 'ஒரு மாதிரியாக‘ இருக்கிறது என்று நீங்கள் நியாயமாக உணர்ந்தால் வெளியே செல்வதைத் தவிர்த்து வீட்டில் ஓய்வு எடுங்கள்.

நீர்ச் சத்து நிறைய தேவை. நீர் ஆகாரங்களை உண்ணுங்கள்.

வெளியில் உண்ணும் பண்டங்களை அறவே தவிர்த்தல் எப்போதும் நல்லது.

பொது விருந்து - மொத்த சமையல் வகையறா விருந்துகளையும் தவிர்த்து எளிய உணவாகவும், சூடானதாகவும் (சுவையை விட சூடு முக்கியம்) சாப்பிடப் பழகுங்கள்.

9. நோய் பற்றி அச்சமோ, கவலை, அளவுக்கு அதிகமான கற்பனைகளிலோ உங்களை ஈடுபடுத்தி - வராத நோய்கள் உங்களுக்கு வந்ததாக கற்பனை பயத்தினால் நடுங்காதீர்கள்!

செய்வன திருந்தச் செய்யுங்கள். எதையும் துணிவுடன் ஏற்பதே அறிவுடைமை; நம் நலவுடை மைக்கு அதுவே முன்னேற்றமும்கூட! மறவாதீர்!!

- விடுதலை நாளேடு, 5.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக