பக்கங்கள்

வெள்ளி, 8 மார்ச், 2019

இல்லக் குழந்தையை மீட்க நீதிமன்றப் போராட்டம் நடத்தி வென்ற தாய்!

ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் நம் தமிழ்நாட்டில் பல நடைபெறுகின்றன. மதங்களின் சார்பிலும் பல நடைபெற்று வந்தாலும், அங்கே அந்தக் குழந்தைகளை வைத்து சூதாட்டங்கள் போல பலவும், தவறான பயன்பாடுகளும் பற்பல நடைபெறுவதால், குழந்தைகள் இல்லம் நடத்து வோர்மீதே அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும், மக்க ளுக்கும் பல்வேறு சந்தேகங்களும், அருவருப்பு களும் கூட ஏற்படும் அவலம் தற்போது உள்ளது!

ஆனால் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் அவர்களால் துவக்கப் பெற்று சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில் திருச்சியில் நடைபெற்று வரும் "நாகம்மையார் குழந்தைகள் இல்லம்" - "ஒழுக்கத்திலும், கட்டுப் பாட்டிற்கும் எடுத்துக்காட்டானது" என்று உயர்நீதி மன்ற நீதிபதிகளே பாராட்டிடும் வண்ணம் அய்யா வும், அம்மாவும் இதன் அடிக்கட்டுமானத்தை அசைக்க முடியா வண்ணம் அமைத்துள்ளனர். அதனால் அது நெறி தவறுவதில்லை!

தம்மால் மருத்துவமனைகளிலிருந்து பெறப் பட்ட பெண் குழந்தைகள் பலவற்றினையும் பெயரிட்டு, "ஈ.வெ.ரா.ம." முன்னொட்டு (Initials) போட்டு வளர்த்து, படிக்க வைத்து, போதிய வயது வந்தவுடன் திருமணமும்கூட செய்து ஒரு குடும்பம்போல என்றும் தொடர்புடன்  உள்ள இல்லம் நமது திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம்!

அன்னையார் தம் உடல் நலம் குன்றிய போதும், குழந்தைகளின் நலம் பற்றிய அக்கறையும், கவலை யும் கொண்டு பேணி வளர்த்தார்.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம். திடீரென இரண்டு இல்லத்துப் பெண் குழந்தைகள் சாந்தி, தனலட்சுமி என்று பெயர் கொண்டவர்களைக் காணவில்லை - திருச்சி எங்கும் தேடும்படி அம்மா ஆணையிட்டார்; கழகத் தோழர்களை எங்கும் அனுப்பினார் அம்மா.

இந்த இருவரில் ஒரு பெண் சாந்தி குறைவான மார்க் வாங்கியதால், மற்றொரு பெண் தனத்தையும் அழைத்து வெளியே சென்று ஒருவர் வீட்டில் தில்லை நகரில் தங்கி, பிறகு மதுரைக்கு அழைத்துச் சென்று ஒரு  பெரும் பணக்காரர் வீட்டில் வேலை செய்ய அமர்த்தி விட்டார் யாரோ ஒருவர்.

அவர் அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த ஒருவர் பிரபல அரசு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வீட்டில் கொண்டு போய் தனத்தை விட்டார்! அவர்களோடு அவரது சகலை - சென் னையில் அரசு செயலாளர், தகுதியுள்ள ஒருவர் வீட்டுக்கு வேலைக்குப் பெண் தேவை என்பதால் அனுப்பி வைத்து அங்கே வேலை பார்த்தது.

அம்மா எங்கெங்கோ தேடுகிறார். வெளியேறிய மற்றொரு பெண் பள்ளியில் பணியாற்றிய ஒருவ ரிடம் இந்தத் தகவலை கசிய விட்டது - கடிதம் மூலம்; அதன் மூலம் துப்பு துலக்கி திருச்சி அதி காரியிடம் பெரியார் மாளிகை நிர்வாகி திரு. சோமு போய் கேட்க, அவர் அதிகாரத் தோரணையில் பதில் கூறி விட்டார்.

சென்னை வந்தார் - அம்மாவின் உச்சக் கட்ட கோபத்தை நாங்கள் கண்டது அப்போதுதான்!  "ஊராருக்கு வேலை செய்யும் பணிக்கா அவர்கள் இல்லத்திற்கு அனுப்பப்பட்டு இங்கு வந்தனர்!" என்றார்.

எப்படியும் அப்பெண் குழந்தைகளை மீட்டாக வேண்டும் என்று ஒரே நோக்கில் உண்ணாமல், உறங்காமல் இருந்தார்!

நானும், நிர்வாகி சம்பந்தமும், நண்பர்களும் இணைந்து அம்மாவிடம் கூறினோம் - தேடுகிறோம் என்று! அத்துடன் Habeas Corpus சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு ரிட் மனு போட்டார் அம்மா.  அம்மாதான் 'ரிட்' மனுதாரர்! சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஜஸ்டீஸ் பி.ஆர்.கோகுல கிருஷ்ணன், ஜஸ்டீஸ் ஏ.வரதராஜன் ஆகியோர் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது, "உடனடியாக அந்த இல்லத்துக் குழந்தையை அந்த மூத்த அய்.ஏ.அய் அதிகாரி வீட்டிலிருந்து மீட்டு அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று தீர்ப்பு வழங்கினர்.

தனம் என்ற தனலட்சுமி அம்மாவிடம் வந்தது. அறிவுரை கூறி இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

அன்னையார் மறைந்து உடல் பெரியார் திடலில் இறுதி மரியாதை செலுத்த  அந்த இரு மூத்த நீதிய ரசர்களும் கையில் மாலையுடன் வந்து அம்மாவின் உடலின்மீது வைத்தபோது, வியந்து சொன் னார்கள். ஒரு குழந்தையைத் திரும்பிப் பெற எத்தனை முயற்சி எடுத்த பாசமுள்ள தகைமைத் தாய் அவர் என்று கண்ணீர் மல்க வீர வணக்கம் செலுத்தினர்.

அந்த தனலட்சுமிக்கு திருமணத்தை நாங்கள் - எனது தலைமையில் நடத்தி வைத்து, அதற்கு இரண்டு பெண் குழந்தைகள் - மிகச் சிறப்பாகப் படித்து நல்ல துணைவர்களைப் பெற்றும், இந்தப்  பெண் எப்போது எங்கள் வீட்டிற்கு வந்தாலும் தங்கி அண்ணன், அக்கா உறவு அறுபடாமல் வளர்த்த பாசத்தோடு இருந்து வருபவர்.

தையல் கலையில் சிறந்த பயிற்றுநர் தனம். துணைவரை நீண்ட நாள் மருத்துவமனையில் வைத்து கவனித்தும் அவர் நோய் முற்றி மறைந்தார் என்றாலும், தனமும் குழந்தைகளும் எங்கள் தனங் களில் ஒன்று என்று இல்லமும், நாங்களும் பெரு மைப்படும்படி பாசத்தோடும் இன்றும் உள்ளது!

அம்மா என்ற போராளி நீதிமன்ற படிக்கட்டு களிலும்  - குழந்தைகளை மீட்க ஏறி வெற்றி பெற்ற பாசத்தை நினைத்து நினைத்து அவரது நூற் றாண்டில் நெக்குருகிறோம்!

குவலயம் காணா உறவுகள் இவை! பெற் றால்தான் பிள்ளையா என்பார்கள்; யாரோ பெற்று வந்தபிள்ளைகளையும் பெற்ற பிள்ளைகளைவிட பாசத்தைக் கொட்டிய தாயே உங்களை மறக்க முடியுமா?

- விடுதலை நாளேடு, 8.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக