பக்கங்கள்

வியாழன், 12 அக்டோபர், 2017

மாரடைப்பு என்ற இதயக்கொல்லி நோய் - அறிந்துகொள்வீர்!

இதய நோயுடன் இந்தியாவில் 5.4 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும்) அதாவது 54 லட்சம் பேர்கள் இதய நோயுடன் - அதாவது இதய தசைகள் பலவீனமடைந்தும், தடித்தும், இருதயத்திற்குள் சென்று திரும்பும் ரத்த ஓட்டக் குழாய்களில் அவ்வப்போது அடைப்பும் கொண்ட நிலையிலேயே உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மேலே கூறியது.

நம் நாட்டில் 59 வயதில் சராசரியாக இதயநோய்த்தாக்குதல் ஏற்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது!

அறிகுறிகள்:

படபடப்புடன் கூடிய இதயத் துடிப்பு

மூச்சுத் திணறல்

திடீரென்று எடை கூடுதல்

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு கோடியே 75 லட்சம் பேர்களை இந்த இதய நோய் பலி கொள்ளுகிறது!

இது 2030 ஆம் ஆண்டு - நம் நாட் டில் 2 கோடியே 30 லட்சமாக உயரக் கூடிய அபாயம் உண்டு என்று கணக் கிடப்பட்டுள்ளது!!

உலக இதய காப்பு நாளில் இப்படிப் பட்ட பல சிந்தனைகளும், தகவல்களும் நம் அனைவரையும் ‘வருமுன்னர் காப் பவர்களாக ஆக்கிடுதல்’ விரும்பத் தக்கது!

குடும்பப் பாரம்பரிய வரலாறு,

புகை பிடித்தல்,

மது அருந்துதல்,

துரித உணவு என்ற கொழுப்பு உண வுகள்

அதிகமாக எண்ணெய் வறுவல் செய்த உணவுகள்

- இவை இதய நோய் தூண்டும் கரணிகள் ஆகும்!

அதிக உடலுழைப்பின்றி,  சதா அமர்ந்தே இருப்பது, ஓடி ஆடி, நட மாடாமல், ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்தே இருக்கும் நிலை இவை இதய நோய்க்கான அழைப்பு களாகக் கருதப்படுகின்றன.

அன்றாடம் எளிய உடற்பயிற்சி களைச் செய்து, கூடுதலாக சதை விழா மல் கவனஞ்செலுத்தல் போன்றவை களால் நாம் இந்நோயைத் தடுத்தாட் கொள்ள முடியும்.

குடும்பத்தின் வரலாற்றில் பாரம்பரிய மாரடைப்பு, இதயநோய் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக இருப்பின்,  இப்போது அதுபற்றி ஆய்வு செய்து புள்ளி விவரங்களைச் சேகரிப்பதும், அது சரி என்று தெரிந்தால், குடும்ப உறுப்பினர் கள் உள்பட பலருக்கும் சிகிச்சை அளிப் பதும்கூட மிக முக்கிய தேவையாகும். (Genetics to aid at risk Cardiac Patients)

மேலே காட்டிய அறிகுறிகள் மட்டு மல்லாது. வெளிப்படையாக அதன் தாக்குதல் ஏற்படும்போது,

பின்னால் கழுத்து வலி (Back Neck Pain)

தாடை  (Jaw Pain)

திடீரென்று வியர்த்துக் கொட்டுதல் (Suddenly Sweating)

வயிற்றுப் போக்கு மலங்கழித்து - மயக்கமும்!

இடது கை வலி பரவுதல்

இவைகள் உடனடி அறிகுறிகளாகும்!

சில சம்பவங்கள் - Silent Attack - - மவுனத் தாக்குதல்களாக நிகழ்வதும் உண்டு. வியர்க்காதுகூட இந்த நோய் தாக்குதல் நடைபெறுவதும் உண்டு.

இப்படி உணர்ந்தால், உடனடியாக உங்களிடத்தில் உடல்நலத்திற்கு ஊறு செய்யா ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை விழுங்கினால், அது ரத்த ஓட்டத்தை மென்மையாக்கி (Blood thinner)
ஒரு உடனடி நிவாரணம் தரும். உடனே நடக்காமல், மருத்துவமனைக்குச் செல் லுதல் அவசரம், அவசியம் என்று மருத் துவ நண்பர்கள் வழிகாட்டுகிறார்கள்!

முன்பு வயதானால் மாரடைப்பு, இதய நோய் வரும் என்ற நிலை இருந்தது; இப்போது 25, 30 வயது இளைஞர்களைக்கூட இந்நோய் தாக்கி மரணமடையச் செய்வது வேதனைக் கும், துயரத்திற்கும் உரிய செய்தியாகும்!

பயன் பெறுக!

வேறு அறிகுறிகளாக இருப்பினும் அலட்சியப்படுத்தத் தேவையில்லை.

-விடுதலை நாளேடு, 29.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக