பக்கங்கள்

சனி, 19 ஆகஸ்ட், 2017

பயணங்களால் பிறகு ஏது பயன்?


சில வாரங்களுக்கு முன் சுவிட்சர்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாகிய ஜுரிச் (ஞீuக்ஷீவீநீலீ) என்ற அழகிய நகரத்திற்குச் சென்றோம் - ஜெர்மனியில் ஜூலை 27, 28, 29 ஆகிய நாள்களில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டினை முடித்துவிட்டு சாலை வழியே பயணம் செய்து அந்நகரை 6, 7 மணி நேரத்தில் (வழியில் தங்கி உணவு எடுத்துக் கொண்ட நேரமும் இதில் உள்ளடக்கம்) பயணக் களைப்புத் தெரியாத சாலைகள் - இயற்கையின் ரம்மியக் காட்சிகள்!

அந்த நகரத்திற்குள் நுழையும்போது பிற்பகல் 3 மணி இருக்கலாம்!

அன்று ஞாயிற்றுக்கிழமை. கடைகள் எல்லாம் மூடியிருந்தன - ஒரு சில உணவுக் கடைகளைத் தவிர.

எங்களுக்காக பாரிசிலிருந்து காரை எடுத்து வந்து ஜெர்மனி அழைத்துச் சென்றனர் பெரியார் பற்றாளர்களான தோழர் சுசீலா எத்துவால் அவர்களும், தோழர் ரவி அவர்களும்!

ஜுரிச் நகரில் ஒரே அமைதி! எங்கும் அமைதி!! பேசுபவர்கள்கூட - வழி கேட்டு தோழர் ரவி செல்லும் போது கூட எல்லோரும் மிகவும் மெல்லிய குரலில் தான் பேசினார்கள். எங்களை அவர்கள் இல்லத்தில் தங்க வைத்து உபசரித்த தோழர் கைலாயப் பிள்ளை வாசன் அவர்களிடம் இதுபற்றி நாங்கள் கேட்டபோது அவர் சொன்னார்: "இந்த நாட்டில் ஞாயிற்றுக்கிழமையை மிக அமைதி காக்கும் (ஷிவீறீமீஸீநீமீ ஞிணீஹ்) நாளாக" பராமரிக்கிறார்கள்.

மாசுக் கட்டுப்பாடு என்பதும் ஒலிக் கட்டுப்பாடும் சேர்ந்த ஒன்றேயாகும். வீடுகளில் கூட யாரும் பெரும் ஓசை எழுப்ப மாட்டோம், மீறி எழுப்பினால் அபராதமும் போடுவர் அரசும் நகராட்சியும்!

ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுக் கூட்டங்கள் போட்டு, ஒலி பெருக்கி வைத்துப் பேசுவதற்குக் கூட அனுமதி கிடையாது.

வீடுகளில் உரையாடும் போதுகூட மெல்லிய குரலில் குறை ஓசையுடன் தான் பேசிக் கொள்வோம். இந்த ஓசைக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல் என்பது மாசுக்கட்டுப்பாட்டின் ஓர் அம்சமே; ஓசையெழுப்புதல், அதிக ஒலி செய்தல்கூட ஒழுங்கீனம் மட்டுமல்ல; மாசுக் கட்டுப்பாட்டிற்குக் கீழ்வரும்" என்றார்.

அங்கெல்லாம் கார்களில் செல்லும்போது எங்கும் 'ஹாரன்' சப்தம் கேட்கவே இல்லை; இங்கோ...!

மறுநாள் திங்கள்கிழமை ஆகஸ்ட் 1 ஆம் தேதி அந்நாட்டின் சுதந்திர நாள் கொண்டாட்டம் ஆகும்.

அன்று அதைக் கொண்டாட ஜூலை 31ஆம் தேதி மாலை முதல் பல ஊர்களில் வாண வேடிக்கை, பட்டாசு கொளுத்தல் அனுமதிக்கப்படுகிறது. அதுவும் ஒரு குறிப்பிட்ட மணி நேரங்கள் தான் நடைபெறுகின்றது. பிறகு நிறுத்தி விடுகிறார்கள்!

பொதுவாக நம்நாட்டில்தான் உரையாடலின் போது அதிக ஓசையுடன் பேசும் பழக்கம்.

மேலை நாடு என்ன? ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளில் கூட மிகவும் மெல்லியக் குரலில்தான் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் பழக்கம் உண்டு.

இங்கோ பட்டாசுகளையும் கூட இரவெல்லாம் வெடிக்கும் நிலையும், பலரது தூக்கத்தையும் கெடுத்து, தேர்வுக்குப் படிக்கும் மாணவ - மாணவிகளுக்குக் கூட பெருந்தொல்லை, அவதியாகவும் இருக்கிறது.

பலரும் நாம் வெளிநாடு சுற்றுலா சென்று காட்சிகளைக் கண்டு களிக்கிறோம், செல்பி எடுத்துக் கொள்ளவும் தயங்குவதில்லை.
ஆனால் அங்குள்ள நல்லவைகளைக் நாம் நம் வாழ்வில் நடைமுறையில் செயல்படுத்த ஏனோ தவறுகிறோம்! பயணங்களால் பிறகு ஏது பயன்?

-விடுதலை,11.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக